போடி அருகே கொட்டகுடி ஆற்றில் பாலம் அமைக்க கோரிக்கை

*ஓபிஎஸ் நடவடிக்கை எடுக்கவில்லை என புகார்

போடி : போடி அருகே மேலப்பரவு கொட்டகுடி ஆற்றில் பாலம் கட்டித் தர வேண்டும் என்ற தொடர்ச்சியாக கோரிக்கை வைத்து வந்தனர். ஆனால் இந்த கோரிக்கை நிறைவேறாததால் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் போடி அருகே மேற்கு மலை தொடர்ச்சி மற்றும் வடக்கு மலை சார்ந்துள்ள போடிமெட்டு, குரங்கணி மலை அடிவாரத்தில் முந்தல் சாலையில் ஆண்டி ஓடை பிரிவிலிருந்து பாண்டி முனீஸ்வரன் கோயில் சாலையில் 3 கிலோ மீட்டர் தூரத்தில் மேலப்பரவு மலை அடிவார கிராமம் உள்ளது.

இங்கு மலைவாழ் மக்கள் சுமார் 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தைச் சுற்றி பல நூற்றுக்கணக்கான ஏக்கரில் விவசாயம் நடந்து வருகிறது.
இந்த கிராமச் சாலையின் குறுக்கே கொட்டகுடி ஆறு செல்கிறது.

மலை கிராமத்தினர், விவசாயிகள் தொழிலாளர்கள் அனைவரும் இந்த ஆற்றைக் கடந்து தான் மேலபரவு கிராமத்திற்கு செல்ல முடியும். இந்த ஆற்றில் நீர்வரத்து இல்லாத போது வாகனங்கள், பொதுமக்கள் அனைவரும் ஆற்றுப் பகுதியில் இறங்கி கடந்து செல்கின்றனர். மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் விவசாயம் செய்வோர், காபி தோட்டங்களுக்கு வேலைக்கு செல்வோர், கிராம மக்கள் என தினசரி ஆயிரக்கணக்கானோர் இந்த ஆற்றைக் கடந்து சென்று வருகின்றனர்.

ஆனால் மழை காலத்தில் நீர் வரத்து அதிகமாக இருக்கும் போது, பொதுமக்கள் சிரமத்துடன் தண்ணீருக்குள் இறங்கி கடந்து செல்ல வேண்டியுள்ளது. வெள்ளம் வரும்போது கடந்து செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. ஆற்றில் நீர் வரத்து இருக்கும் போது வாகனங்களை கொண்டு செல்ல முடியவில்லை. இதனால் அத்தியாவசிய பொருட்களையும், விளைபொருட்களையும் எடுத்துச் செல்ல முடியாத நிலை உள்ளது.

மேலப்பரவு கிராம மக்களுக்கு கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் கலைஞர் முதல்வராக இருந்த போது தொகுப்பு வீடுகள் கட்டித்தரப்பட்டது.வருடத்தில் 8 மாதம் வரையில் தெ ன்கிழக்கு மற்றும் வடகிழக்கு பருவ மழை நேரங்களில் மற்றும் சாதாரண மழையிலும் திடீரென வெள்ளம் பெருக்கெடுப்பது வழக்கமாக இன் னும் இருந்து வருகிறது.

அது போன்ற நேரங்களில் முற்றிலும் கடக்க முடியாமல் இருபுறம் கரை பகுதிகளில் தோட்டங்களுக்குள் தொழிலாளர்கள் தங்க வேண்டியுள்ளது.எனவே இந்த ஆற்றின் குறுக்கே பாலம் கட்டித் தர வேண்டும் எனவும், மண் சாலையை சீரமைத்து தார்ச்சாலை அமைக்க வேண்டும் எனவும் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் மனு அளிக்கப்பட்டது.

அப்போது போடி எம்எல்ஏ என்ற முறையில் ஓபிஎஸ் நேரில் சென்று பார்வையிட்டு பாலம் அமைத்துத்தரப்படும் என உறுதி அளித்ததாகவும், ஆனால் அதன் பின்னஆட்டோ கவிழ்ந்து விபத்து பணிகள் எதுவும் நடைபெறவில்லை என்றும் இந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் மாவட்ட அதிகாரிகள் இப்பகுதியினை நேரில் ஆய்வு பாலம் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

The post போடி அருகே கொட்டகுடி ஆற்றில் பாலம் அமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: