சென்னை: முருக பக்தர்களுக்காக நடப்பு ஆண்டு முதல் சர்வதேச மாநாடு நடத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. இந்த ஆண்டு ஜூன் அல்லது ஜூலையில் பழனியில் இரு நாட்கள் மாநாடு நடத்தப்படும் என்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். பல நாடுகளில் இருந்து ஆண்டு தோறும் ஆயிரம் முருக பக்தர்களை அழைத்து மாநாடு நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.