திருவெறும்பூர் பகுதியை சேர்ந்த 5 மாற்று திறனாளிகளுக்கு 3 சக்கர மோட்டார் வாகனம் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்

 

திருவெறும்பூர், மார்ச் 12: திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 5 மாற்று திறனாளிகளுக்கு தலா ரூ. 96 ஆயிரம் மதிப்பீட்டில் மூன்று சக்கர ஸ்கூட்டிகளை தனது 2023 மற்றும் 2024 ஆண்டு தொகுதி வளர்ச்சி நிதிமூலம் தமிழக பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார். திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும், தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தனது சட்டமன்ற உறுப்பினர் 2023- 2024 ம் ஆண்டு தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் மாவட்ட அலுவலகம் சார்பாக 5 நபர்களுக்கு தலா ரூ.96 ஆயிரம் மதிப்புள்ள மூன்று சக்கர மோட்டார் வாகனத்தை திருவெறும்பூர் தொகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், மாற்றுத்திறனாளிகள் மாவட்ட நல அலுவலர் சந்திரமோகன் உதவி அலுவலர் ரமேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

 

The post திருவெறும்பூர் பகுதியை சேர்ந்த 5 மாற்று திறனாளிகளுக்கு 3 சக்கர மோட்டார் வாகனம் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார் appeared first on Dinakaran.

Related Stories: