திருத்துறைப்பூண்டி அருகே ஆதிரெங்கம் அங்காள பரமேஸ்வரி கோயிலில் தெப்பத் திருவிழா

 

திருத்துறைப்பூண்டி, மார்ச் 12: திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள ஆதிரெங்கம் அங்காள பரமேஸ்வரி கோயிலில் தெப்பத்திருவிழா நடைபெற்றது. இதைமுன்னிட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பால் குடம் மற்றும் செடில் காவடி எடுத்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். காலை முதல் இரவு வரை பத்தாயிரம் பேருக்கு அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து மூன்றாவது நாளில் ஆலயத்திற்கு எதிரே அமைந்துள்ள தெப்பக்குளத்தில் தெப்போற்சவம் நடைபெற்றது. இதில் பிரமாண்ட தெப்பத்தில் அம்மன் சுற்றி வந்து காட்சியளித்தது. இதில் உள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை திருத்துறைப்பூண்டி போலீசார் செய்து இருந்தனர்.

The post திருத்துறைப்பூண்டி அருகே ஆதிரெங்கம் அங்காள பரமேஸ்வரி கோயிலில் தெப்பத் திருவிழா appeared first on Dinakaran.

Related Stories: