தலைஞாயிறு பேரூராட்சி பகுதியில் குடுகுடுப்பைக்காரர் வேடத்தில் திமுகவினர் நூதன பிரசாரம்

 

வேதாரண்யம், மார்ச்12: நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம், தாலுகா தலைஞாயிறு பேரூராட்சி பகுதிகளில் திமுக சார்பில், சேலம் கோவிந்தன் குடுகுடுப்பைகாரர் வேடமிட்டு வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு அனைவரும் வாக்களியுங்கள் என்றும், திமுக ஆட்சியில் தற்போது செயல்படுத்தி வரும் திட்டங்களை ஒவ்வொன்றாக விளக்கி கூறி நூதன பிரசாரத்தில் ஈடுபட்டார். பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், பெண்களுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய், தமிழகத்தை குடிசை இல்லாத மாநிலமாக உருவாக்கப்படும் உள்ளிட்ட திட்டங்களை கூறி நல்ல காலம் பிறக்குது, நல்ல காலம் பிறக்குது, ஜக்கம்மா சொல்றா என குடுகுடுப்பை அடித்தவாறு வீடு வீடாக சென்று பிரசாரம் மேற்கொண்டார். இந்த பிரசாரத்தை பேரூர் திமுக செயலாளர் சுப்பிரமணியன் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட நெசவாளர்கள் துணை அமைப்பாளர் வீரகுமார், முன்னாள் பேரூராட்சி தலைவர் ராஜேந்திரன், பேரூர் அவை தலைவர் தமிழ்மணி, பூத் ஒருங்கிணைப்பாளர்கள் பிரபாகரன், ஹைதர் அலி, பேரூர் துணை செயலாளர் முருகாணந்தம், பேரூர் கழக பொருளாளர் அச்சகம் அன்பு மற்றும் திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த நூதன பிரசாரம் பொதுமக்களுடைய நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

The post தலைஞாயிறு பேரூராட்சி பகுதியில் குடுகுடுப்பைக்காரர் வேடத்தில் திமுகவினர் நூதன பிரசாரம் appeared first on Dinakaran.

Related Stories: