சங்கரநாராயணசுவாமி கோயிலில் பக்தர்களுக்கு நீர், மோர் வழங்கல்

சங்கரன்கோவில், மார்ச் 12: சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் கோடை காலத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு நீர், மோர் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் அறங்காவலர் குழு தலைவர் சண்முகையா தலைமை வகித்து பக்தர்களுக்கு நீர், மோர் வழங்கி துவக்கி வைத்தார். நிகழ்வில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ராமகிருஷ்ணன், முப்பிடாதி, முத்துலட்சுமி, வெள்ளைச்சாமி, வக்கீல் அன்புச்செல்வன் மற்றும் கோயில் பணியாளர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

The post சங்கரநாராயணசுவாமி கோயிலில் பக்தர்களுக்கு நீர், மோர் வழங்கல் appeared first on Dinakaran.

Related Stories: