இதில், உற்சவர், ஸ்ரீ வைத்திய வீரராகவப் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, தெப்பத்தில் எழுந்தருளி கோயில் குளத்தை 3 முறை வலம்வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அப்போது நோய் தீர்க்க வேண்டிக் கொண்டு தெப்பத் திருவிழாவில் பெருமாளை தரிசித்தால் நோய் தீரும் என்பதால் திரளான பக்தர்கள் வழிபட்டனர்.
இந்நிலையில் 3 முறை குளத்தை வலம் வந்த பிறகு திருக்கோயில் ஆலயத்திற்கு ஸ்ரீ வைத்திய வீரராகவப் பெருமாள் சென்றார். இந்த மாசிமாத தெப்பத் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை வழிபட்டு சென்றனர்.
The post ஸ்ரீ வைத்திய வீரராகவப் பெருமாள் கோயிலில் மாசி அமாவாசையை முன்னிட்டு தெப்ப உற்சவம் appeared first on Dinakaran.