விஸ்வவனம் அமைப்பை அறக்கட்டளையாக மாற்ற உதவி செய்து, அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவை சந்திக்க ஏற்பாடு செய்தார். மதிமுகவினர் மற்றும் தன்னார்வலர்கள் மூலம் அங்கிருந்த ஆக்கிரமிப்புகள், குப்பை மற்றும் சீமைக் கருவேல மரங்கள் அகற்றப்பட்டன. பிறகு ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டு சொட்டுநீர் பாசன வசதியும் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து, ஒரு லட்சம் மரக்கன்றுகள் மியாவாக்கி முறையில் நட திட்டப்பட்டுள்ள நிலையில் முதற்கட்டமாக 1500 மரக்கன்றுகள் நேற்று நடப்பட்டன. இதை அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு மற்றும் துரை வைகோ தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் மதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் புதூர் பூமிநாதன், சதன் திருமலைக்குமார், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் அசோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
The post சிவகாசி அருகே மதிமுக சார்பில் குறுங்காடுகள் திட்டம்: அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர் appeared first on Dinakaran.