உத்தரப்பிரதேசத்தில் பேருந்து தீ பிடித்ததில் 10 பேர் பலி

காசிப்பூர் : உத்தரப்பிரதேசத்தில், பேருந்து தீ பிடித்து எரிந்ததில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு என தகவல் வெளியாகியுள்ளது. காசிப்பூர் பகுதியில், திருமண நிகழ்வுக்கு சென்ற பேருந்தில் தீ விபத்து ஏற்பட்டது. 20க்கும் மேற்பட்டோர் பயணம் செய்த நிலையில், 10க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு என தகவல் வெளியாகியுள்ளது. உயர் அழுத்த மின் கம்பியில் உரசியதால், பேருந்து தீ பிடித்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

The post உத்தரப்பிரதேசத்தில் பேருந்து தீ பிடித்ததில் 10 பேர் பலி appeared first on Dinakaran.

Related Stories: