அதை நிரூபிக்கும் வகையில் கர்நாடக மாநில அதிமுக செயலாளர் எஸ்.டி.குமார் விருப்ப மனு அளித்தார். பெங்களூருவில் உள்ள 3 மக்களவை தொகுதிகளில் தமிழர்கள் பெருவாரியாக வாழ்ந்து வரும் மத்திய தொகுதியில் போட்டியிட அவர் விருப்ப மனு அளித்துள்ளார். இதைத் தொடர்ந்து இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அவர்களுக்கான நேர்காணல் நடைபெற உள்ளது. நேர்காணலை தொடர்ந்து கர்நாடகாவில் அதிமுக போட்டியிடுமா என்பது குறித்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார்.
The post கர்நாடகாவில் அதிமுக போட்டி? appeared first on Dinakaran.