இந்த வழக்கு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்நிலையில், தங்கள் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி வெங்கட்ரமணி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர் வி.ரமேஷ் ஆஜராகி, எந்த குற்றமும் நடக்காமல் மனுதாரர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று வாதிட்டார். மனுவை விசாரித்த நீதிபதி, மனுதாரர்கள் மீது சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.
The post பாமகவினரை திட்டியதாக வழக்கு பாஜ பிரமுகர்கள் 5 பேர் மீதான வழக்கு ரத்து: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.