அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், வேன் டிரைவர் முருகனை தாக்கியதில் மயங்கி இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. போலீசாரை கண்டித்து நேற்று முன்தினம் இரவு 9 மணி முதல் நேற்று அதிகாலை 4 மணி வரை உறவினர்கள், பொதுமக்கள் மறியல் போராட்டம் நடத்தினர். அவர்களிடம் தென்காசி எஸ்பி சுரேஷ்குமார், நெல்லை எஸ்பி சிலம்பரசன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் முருகனின் மைத்துனர் சங்கர்குமார் (30) கொடுத்த புகாரின் பேரில், அடையாளம் தெரியாத 3 போலீசார் மீது சங்கரன்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
The post டிரைவர் உயிரிழப்பு 3 போலீசார் மீது வழக்குப்பதிவு appeared first on Dinakaran.