பைக் மீது ஆட்டோ மோதி வாலிபர் பலி

கயத்தாறு, மார்ச் 9: கயத்தாறு காவல் சரகத்திற்கு உட்பட்ட கரிசல்குளம் வடக்கு தெருவை சேர்ந்த நாகராஜன் மகன் மாரிச்செல்வம் (26). கூலி தொழிலாளியான இவர் தனது நண்பர் கரிசல்குளம் நடுத்தெருவை சேர்ந்த மாரியப்பன் மகன் நரேஷ் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் கயத்தாறுக்கு வந்துவிட்டு ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது கயத்தாறு-மதுரை மெயின்ரோட்டில் அமைந்துள்ள யானைக்குழாய் பாலம் அருகே வரும்போது எதிரே வந்த ஆட்டோ மீது மோதியதில் மாரிச்செல்வம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். நரேஷுக்கு கை முறிவு ஏற்பட்டது. விபத்தில் பலியான மாரி செல்வத்துக்கு மீனு பிரியா என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். விபத்து குறித்து கயத்தாறு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post பைக் மீது ஆட்டோ மோதி வாலிபர் பலி appeared first on Dinakaran.

Related Stories: