பேரூராட்சி கவுன்சிலர் பூமதிக்கு போன் செய்யும் நிர்வாகி, என்னை பற்றி ஏன்? பேரூராட்சி கூட்டத்தில் பேசினீர்கள் என கேட்கிறார். அப்போது பூமதி, நான் யார் குறித்தும் பேச வில்லை. நீங்கள் பேரூராட்சி காண்ட்ராக்டர் என்றால் எனக்கு கவலை இல்லை. நான் எனது வார்டில் மோட்டாரை தூக்கி சென்று இன்னும் பொருத்தாமல் இருப்பது குறித்து தான் கூறினேன் என்றார். ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த அந்த நிர்வாகி, நான் யார் என தெரியாமல் விளையாடுகிறாய். உன் தாலியை அறுத்தேனா? என கூறி, பூமதியை ஆபாசமாக திட்டி மிரட்டுகிறார். இதுகுறித்த ஆடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது. உலகம் முழுவதும் நேற்று மகளிர் தின விழா கொண்டாடப்பட்ட நிலையில் பெண் கவுன்சிலர் ஒருவரை, அமமுக நிர்வாகி ஒருவர் ஆபாசமாக பேசி மிரட்டி உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post அதிமுக பெண் கவுன்சிலரை மிரட்டிய அமமுக நிர்வாகி: மகளிர் தினத்தில் வெளியான பரபரப்பு ஆடியோ appeared first on Dinakaran.