பிஎன்பி பாரிபா ஓபன்: 2வது சுற்றில் ஒசாகா

இண்டியன் வெல்ஸ்: அமெரிக்காவில் நடக்கும் இண்டியன் வெல்ஸ் பிஎன்பி பாரிபா ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் விளையாட ஜப்பான் நட்சத்திரம் நவோமி ஒசாகா தகுதி பெற்றார். முதல் சுற்றில் இத்தாலியின் சாரா எர்ரானியுடன் (36 வயது, 65வது ரேங்க்) நேற்று மோதிய முன்னாள் நம்பர் 1 ஒசாகா (26வயது, 287வது ரேங்க்) 6-3, 6-1 என நேர் செட்களில் எளிதாக வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார். இப்போட்டி ஒரு மணி, 9 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது. மற்றொரு முதல் சுற்றில் பிரிட்டனின் எம்மா ரடுகானு (21 வயது, 250வது ரேங்க்) 6-2, 6-3 என்ற நேர் செட்களில் ஸ்பெயினின் ரெபேகா மசரோவாவை (24 வயது, 96வது ரேங்க்) வீழ்த்தினார். முன்னணி வீராங்கனைகள் ஸ்லோன் ஸ்டீபன்ஸ் (அமெரிக்கா), லெசியா சுரெங்கோ (உக்ரைன்), ஜின்யு வாங் (சீனா), கேதரினா சினியகோவா ஆகியோரும் 2வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர். செக். நட்சத்திரம் கரோலினா பிளிஸ்கோவா தனது முதல் சுற்றில் 1-6, 6-2, 4-6 என்ற செட் கணக்கில் ரஷ்யாவின் அன்னா பிளிங்கோவாவிடம் தோற்று ஏமாற்றத்துடன் வெளியேறினார்.

The post பிஎன்பி பாரிபா ஓபன்: 2வது சுற்றில் ஒசாகா appeared first on Dinakaran.

Related Stories: