பெரிய முதலாளி வீட்டு கல்யாண வேலைய பாக்கவே மோடிக்கு நேரமில்லை

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் லட்சுமி ராமச்சந்திரன் சத்தியமூர்த்திபவனில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: இந்தியாவில் பெண்களுக்கு விரோதமாக நடக்கிற வன்முறை சம்பவங்களும், பாலியல் குற்றங்களும் மொத்தமாக 4,46,256 வழக்குகள் பதிவாகியுள்ளது. ஒவ்வொரு மணிக்கும் 51 வழக்குகள் பதிவாகிறது. பெண்களுக்கு விரோதமாக செயல்பட்டதாக 21 பாஜ எம்பிக்கள் மீது மிகப்பெரிய கிரிமினல் குற்றங்கள் இருக்கிறது.

பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க சமூகத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும். ஆண் பிள்ளைகளை சரியாக வளர்க்க வேண்டும். சட்டங்கள் இன்னும் மாற்றப்பட வேண்டும். பெரிய முதலாளிகளுக்கான அரசாக ஒன்றிய பாஜ அரசு நடக்கிறது. பெண்கள் மற்றும் இளைஞர்கள், விவசாயிகள் சந்திக்கிற பிரச்னைகளை பற்றி பாஜ அரசு கவலைப்படுவதில்லை. அம்பானி வீட்டு கல்யாண வேலைகளை பார்ப்பதிலேயே பிரதமர் மோடிக்கு நேரம் இல்லை. பெண்களுக்கான கிப்ட் என்று சிலிண்டர் விலையை ரூ.100 மட்டுமே குறைத்திருக்கிறார்கள்’என்றார்.

The post பெரிய முதலாளி வீட்டு கல்யாண வேலைய பாக்கவே மோடிக்கு நேரமில்லை appeared first on Dinakaran.

Related Stories: