பரமக்குடி கீழ முஸ்லிம் பள்ளியில் ரூ.28 லட்சத்தில் இறகுப்பந்து அரங்கம்: நவாஸ் கனி எம்பி திறந்து வைத்தார்

 

பரமக்குடி, மார்ச் 8: பரமக்குடி கீழ முஸ்லிம் பள்ளியில் ரூ.28 லட்சம் மதிப்பில் இறகுப்பந்து உள் விளையாட்டு அரங்கத்தை நவாஸ் கனி எம்பி திறந்து வைத்தார். பரமக்குடி கீழ முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனியின் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.18 லட்சம் மற்றும் பரமக்குடி கீழ முஸ்லிம் ஜமாத் ரூ.10 லட்சம் என மொத்தம் ரூ.28 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட இறகுப்பந்து உள் விளையாட்டு அரங்க திறப்பு விழா நடந்தது. விழாவிற்கு பரமக்குடி கீழ முஸ்லிம் ஜமாத் சபை தலைவர் சாகுல் ஹமீது தலைமை தாங்கினார்.

பரமக்குடி கீழ முஸ்லிம் மேல் நிலைப்பள்ளி தாளாளர் ஷாஜகான், கீழ முஸ்லிம் ஜமாத் சபை பொருளாளர் லியாகத்தலி கான் மற்றும் கல்விக்குழு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். கீழ முஸ்லிம் ஜமாத் சபை செயலாளர் சாதிக் அலி அனைவரையும் வரவேற்றார்.விழாவில் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்ட இறகுப்பந்து உள் விளையாட்டு அரங்கத்தினை ராமநாதபுரம்

நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி திறந்து வைத்து பேசினார். இந்த நிகழ்ச்சியில் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன், நகராட்சித் தலைவர் சேது கருணாநிதி, 13வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் அப்துல் மாலிக், தி.மு.க. நகர் (வடக்கு) செயலாளர் ஜீவரெத்தினம் மற்றும் ஜமாத் சபை நிர்வாகிகள், பள்ளி கல்விக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பள்ளி தலைமையாசிரியர் அஜ்மல்கான் நன்றி கூறினார்.

The post பரமக்குடி கீழ முஸ்லிம் பள்ளியில் ரூ.28 லட்சத்தில் இறகுப்பந்து அரங்கம்: நவாஸ் கனி எம்பி திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: