அஞ்சுகிராமம் அருகே அசாம் தொழிலாளி பலி

அஞ்சுகிராமம்,மார்ச் 8: அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் நிகில் ராஜ் போங்ஸி. அவரது மகன் பிரகாஷ் ராஜ் போங்ஸி (25). அசாமில் இருந்து கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு, குமரி மாவட்டம் வந்தார். மருங்கூரை அடுத்த குமாரபுரம் தோப்பூரில் வாடகை வீட்டில் தங்கி இருந்து கொத்தனார் கையாள் (சித்தாள்) வேலைக்கு சென்று வந்தார். சம்பவத்தன்று அவருக்கு கடுமையான வயிற்று வலி வந்துள்ளது. உடனே மருங்கூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளார். அங்கு மருத்துவர் அவருக்கு சிகிச்சை செய்து விட்டு நோயின் தாக்கம் அதிகமாக இருப்பதாகவும் உடனே ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை மேற்கொள்ளவும் அறிவுறுத்தி உள்ளார். ஆனால் மருத்துவ சிகிச்சைக்கு செல்லாமல் வீட்டிற்கு சென்றுள்ளார். அதன்பின் இரவு சுமார் ஒரு மணி அளவில் வாந்தி வந்துள்ளது. உடனே அவரை உடனிருந்தவர்கள் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொண்டு சேர்த்துள்ளனர். அங்கு பணியில் இருந்த மருத்துவர்கள் அவரை பரிசோதித்து விட்டு அவர் இறந்து போனதாக கூறியுள்ளனர். இது தொடர்பாக நல்லூர் கிராம நிர்வாக அதிகாரி பரத் அருண் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post அஞ்சுகிராமம் அருகே அசாம் தொழிலாளி பலி appeared first on Dinakaran.

Related Stories: