இணைய வழி குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு

அம்பத்தூர்: ஆவடி காவல் ஆணையரகம் சார்பில், இணைய வழி குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. ஆவடி காவல் ஆணையரகத்தின் இணைய வழி குற்றப்பிரிவு சார்பில், இணைய வழி குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி, அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையம் அருகே நேற்று நடைபெற்றது. இதில் ஆவடி காவல் ஆணையர் சங்கர் கலந்து கொண்டு பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். நிகழ்ச்சியில், மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் பெருமாள் மற்றும் இணையவழி குற்றபிரிவு கூடுதல் துணை ஆணையர் நடேசன், அம்பத்தூர் உதவி ஆணையர் கிரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post இணைய வழி குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Related Stories: