கணவர் முருகன் இலங்கை தூதரகம் சென்று வர அனுமதி கோரி நளினி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

சென்னை: கணவர் முருகன் இலங்கை தூதரகம் சென்று வர அனுமதி கோரி நளினி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். பாஸ்போர்ட் பெறுவதற்கான நேர்காணலுக்காக இலங்கை செல்ல கணவர் முருகனை அனுமதிக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முருகன் திருச்சி சிறப்பு முகாமில் உள்ள நிலையில் ஜனவரி 30ம் தேதி நேர்காணலுக்கு அழைத்து வரப்படவில்லை என நளினி தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தில் தனக்கான நேர்காணல் முடிந்துவிட்ட நிலையில் கணவர் வரவில்லை எனவும் நளினி கூறியுள்ளார்.

The post கணவர் முருகன் இலங்கை தூதரகம் சென்று வர அனுமதி கோரி நளினி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!! appeared first on Dinakaran.

Related Stories: