உசிலம்பட்டி அருகே மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வகை போட்டிகள்

உசிலம்பட்டி, மார்ச் 7: உசிலம்பட்டி பகுதியில் உள்ள சுமார் 38 அரசு பள்ளிகளில் பயிலும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு வட்டார வள மையம் சார்பில், சுற்றுச்சூழல் உருவாக்க விளையாட்டு நிகழ்ச்சிகள் நேற்று நடைபெற்றது. ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்குநர் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர் வழிகாட்டுதலின்படி புதிரை கண்டுபிடி, நடித்து விளையாடு மற்றும் பலூன் விளையாட்டு போன்ற விளையாட்டுகள் நடைபெற்றது. இப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனூர் ஆயத்த பயிற்சி மையத்தில் நடைபெற்றது. வட்டார வளமைய மேற்பார்வையாளர் மஞ்சு முன்னிலை வகித்தார். இதில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு வட்டார கல்வி அலுவலர் திலகவதி பரிசுகளை வழங்கினார். கல்விக்குழு ஒருங்கிணைப்பாளர் ஜெயந்தி, சிறப்பு பயிற்றுனர் மகேஸ்வரன், பிஸியோதெரபிஸ்ட் ராஜேஸ்வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post உசிலம்பட்டி அருகே மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வகை போட்டிகள் appeared first on Dinakaran.

Related Stories: