அதன்பின்னர் மீதமுள்ள ₹20 லட்சத்தை தொகையை நான் கேட்டபோது, பணமெல்லாம் வழக்கறிஞர் சிவசேனாதிபதியிடம் கொடுத்துவிட்டேன் என விஜயகுமார் கூறிவிட்டார். தொடர்ந்து, நான் சிவசேனாதிபதியை தொடர்பு கொண்டு கேட்டேன். அப்போது அவர் ஒரு செக்கை கொடுத்து தான் சொல்லும்போது வங்கிக்கு சென்று பணம் பெற்றுக் கொள்ளுமாறு கூறினார். மீண்டும் விஜயகுமாரை தொடர்பு கொண்டபோது, பணம் தரமுடியாது, உன்னால் என்ன செய்யமுடியுமோ செய் என்று கூறிவிட்டார். மேலும், அவரது மனைவி பாஜ மாவட்டத் தலைவரான பின்னர், எங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து, புகார் அளித்தும் அந்தியூர் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, எனது சொத்தை அபகரித்துக்கொண்டதுடன், எனக்கு கொலை மிரட்டலும் விடுத்து வருபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
The post ரூ.25 லட்சம் சொத்தை அபகரித்த பாஜ மாவட்ட தலைவரின் கணவர்: கொலை மிரட்டல் விடுப்பதாக எஸ்.பியிடம் புகார் appeared first on Dinakaran.