புதுச்சேரி சிறுமி படுகொலை: நீதி வழங்கக்கோரி நகர் முழுவதும் கொந்தளிப்புடன் மக்கள் போராட்டம்..!!

புதுச்சேரி சோலைநகர் சிறுமி கொலை விவகாரத்தில், நீதி வழங்கக்கோரி சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள், பெண்கள் ஒன்று திரண்டு கடற்கரை சாலை காந்திசிலை முன்பு கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெண் குழந்தைக்கு பாதுகாப்பு வேண்டும். இறந்துபோன சிறுமிக்கு நீதி வேண்டும். குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும். போதைப் பொருளை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் கோஷம் எழுப்பினர். இதேபோல் மாநிலம் முழுவதும் மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தை முன்னெடுத்தனர்.

The post புதுச்சேரி சிறுமி படுகொலை: நீதி வழங்கக்கோரி நகர் முழுவதும் கொந்தளிப்புடன் மக்கள் போராட்டம்..!! appeared first on Dinakaran.

Related Stories: