அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை முதன்மை கல்வி அலுவலர் பங்கேற்பு

நாகர்கோவில், மார்ச் 6: திருவட்டார் சரகம் காட்டத்துறை அரசு தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற மாணவர் சேர்க்கை விழாவில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி கலந்து கொண்டார். பள்ளியில் 19 மாணவர்கள் 2024-2025 ம் கல்வி ஆண்டிற்கு ஒன்றாம் வகுப்பில் சேர்ந்தனர். விழாவில் கலந்துகொண்ட மாணவர்களின் பெற்றோர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அரசின் நலத்திட்டங்களை எடுத்துக் கூறினார். வட்டாரக் கல்வி அலுவலர் திருமலைக்குமார் கலந்துகொண்டார்.

The post அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை முதன்மை கல்வி அலுவலர் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: