இதனை விசாரித்த கொலராடோ நீதிமன்றம், ட்ரம்ப் குற்றவாளி என்று தீர்ப்பளித்ததுடன் அவரது பெயரை வேட்பாளர் பட்டியலில் இருந்தும் நீக்க கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உத்தரவிட்டது. இது ட்ரம்பிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்திய நிலையில், தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு, நாட்டின் உயர்பதவிக்கு போட்டியிடும் ஒருவரை மாநில நீதிமன்றம் தடை செய்ய முடியாது என்றும் ஒருமனதாக தீர்ப்பளித்தது. அரசியல் சாசனம் 14வது சட்டத் திருத்தம் இதற்கு பொருந்தாது என்று குறிப்பிட்ட நீதிபதிகள், கொலராடோ வாக்குப்பதிவில் இருந்து ட்ரம்பின் பெயரை நீக்கியதையும் ரத்து செய்தனர். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அமெரிக்காவுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்று ட்ரம்ப் குறிப்பிட்டார். ட்ரம்ப் பெயரை வேட்பாளர் பட்டியலில் சேர்க்க தடை விதித்த நீதிமன்ற உத்தரவுகள் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
The post உயர்பதவிக்கு போட்டியிடும் ஒருவரை தடை செய்ய முடியாது.. அதிபர் தேர்தலில் ட்ரம்ப் போட்டியிட அமெரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி!! appeared first on Dinakaran.