நில அளவை அலுவலர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

 

தேனி, மார்ச் 5: தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு நில அளவர்கள் மற்றும் அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு நில அளவை அலுவலர் ஒன்றிப்பு மாவட்ட தலைவர் வேல்முருகன் தலைமை வகித்தார். செயலாளர் சரவணன், பொருளாளர் ஜெகநாதன் முன்னிலை வகித்தனர்முன்னிலை வகித்தனர்.

இதில் தமிழ்நாடு நில அளவை துறை அலுவலர்கள் சங்க தலைவர் முரளிதரன், மாநில அமைப்பு செயலாளர் கணேஷ் குமார், தமிழ்நாடு நில அளவைத் துறை புல உதவியாளர் சங்க மாவட்ட தலைவர் சுபாஷ் சந்திரபோஸ், செயலாளர் துரைசாமி ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தின்போது, தஞ்சாவூர் மாவட்டத்தில் நில அளவர் பவ்யா மற்றும் விஏஓ மாரியம்மாள் ஆகியோரை தாக்கியவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க கோரி கோஷங்களை எழுப்பினர்.

The post நில அளவை அலுவலர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: