சிறார் மன்றத்தில் டிவி திருட்டு

தண்டையார்பேட்டை: ராயபுரம் மேற்கு மாதா கோயில் தெருவில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியின் தேவாலயத்தையொட்டி அமைந்துள்ள அறை சிறுவர்கள் மன்றமாக இயங்குகிறது. காவல் துறையினர் பராமரிப்பில் உள்ள இந்த சிறுவர்கள் மன்றம் அறையினை, சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இருந்து போலீசார், வழக்கம்போல நேற்று சோதனை செய்துள்ளனர். அப்போது, அங்கிருந்த 50 இன்ச் எல்இடி டிவி திருடுபோனது தெரியவந்தது. புகாரின்பேரில், ராயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

The post சிறார் மன்றத்தில் டிவி திருட்டு appeared first on Dinakaran.

Related Stories: