இதனால் அதிர்ச்சி அடைந்த கன்னியா லால் இதுகுறித்து கடந்த இரு தினங்களுக்கு முன்பு பொன்னேரி போலீசில் புகார் அளித்தார். தொடர்து, பொன்னேரி குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து ராஜஸ்தானுக்குச் சென்று அங்கு பதுங்கியிருந்த சுரேஷ் யாஸை நேற்றுமுன்தினம் இரவு கைது செய்தனர். பின்னர், பொன்னேரி காவல் நிலையத்திற்கு அவரை அழைத்து வந்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் திருடு போன 2.5 கிலோ தங்கம் என்ன ஆனது, அதனை சுரேஷ் யாரிடமாவது விற்றுவிட்டாரா, இல்லையெனில் கன்னியா லால் சொந்த ஊருக்குச் சென்றபோது நகைகளை கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனரா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post பொன்னேரியில் பரபரப்பு அடகு கடையில் 2.5 கிலோ தங்க நகைகள் திருட்டு: உறவினர் கைது; தனிப்படை போலீசார் விசாரணை appeared first on Dinakaran.