அப்போது பிறந்த 2 மாதங்களே ஆன ஒரு குட்டி யானை தன் தாய் யானையை பார்ப்பதற்காக அதே பகுதியில் சுற்றி வந்ததால் யானைக்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து குட்டி யானையை தாய் யானை அருகே வராதபடி தடுத்து பராமரிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். தற்போது உடல்நலம் குன்றிய காட்டு யானைக்கு குளுக்கோஸ் மூலம் தொடர்ந்து சிகிச்சை அளிக்கும்பணி நடந்து வருகிறது. மேலும் யானை தீவனம் உட்கொள்வதற்காக வைக்கோல் மற்றும் பச்சை தீவனம் உள்ளிட்டவை தயாராக வைக்கப்பட்டுள்ளது. மேலும் குட்டி யானைக்கு லாக்டோஜன் திரவ உணவு வழங்கப்படுகிறது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் துணை இயக்குனர் சுதாகர் தலைமையில் வனத்துறை அதிகாரிகள் அப்பகுதியில் முகாமிட்டு யானைக்கு சிகிச்சை அளிக்கும் பணியை மேற்பார்வையிட்டு வருகின்றனர். தாய் யானை இறக்கும் பட்சத்தில் குட்டி யானையை மற்ற யானைகள் கூட்டத்தில் சேர்ப்பது அல்லது குட்டி யானையை முகாமிற்கு கொண்டு சென்று பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
The post நோயால் பாதிக்கப்பட்ட யானைக்கு சிகிச்சை: தனி இடத்தில் குட்டி யானைக்கு கவனிப்பு appeared first on Dinakaran.