இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டார். இதன் அடிப்படையில் ஸ்டெர்லின் மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் ஸ்டெர்லின் கூறி இருப்பதாவது: திருமணம் நடந்து முதலிரவு அன்றே என் கணவர் பிரவீன் சூர்யா, எடுத்த எடுப்பிலேயே எனக்கு உனது வீட்டாரிடம் பேசி இப்பவே புல்லட் பைக் வாங்கிக்கொடு என அடம் பிடித்தார். இதையடுத்து ஒவ்வொரு நாளும் எனக்கு அது வேண்டும், இதுவேண்டும் உனது வீட்டிற்கு சென்று பெற்றோரிடம் கேட்டு வாங்கி தா எனக்கூறி பிரவீன் சூர்யா மற்றும் அவரது குடும்பத்தினர் என்னை கொடுமைப்படுத்தினர்.
மேலும் என் பெற்றோர் வசிக்கும் வீட்டை என் பெயரில் மாற்றி எழுதிக் கொண்டு வருமாறும் கேட்டு டார்ச்சர் செய்தனர். எனவே பிரவீன் சூர்யா, அவரது தந்தை ஜான்ராஜ செல்வன் (58), தாயார் கனகராணி (52), பிரவீன் சூர்யாவின் தம்பி பிபின் சூர்யா (20). அவரது மனைவி ஜெனி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகாரில் ஸ்டெர்லின் கூறியிருந்தார். இதன்பேரில் ஸ்டெர்லின் கணவர் பிரவீன் சூர்யா, அவரது தந்தை ஜான் ராஜ செல்வன், தாய் கனகராணி, பிபின் சூர்யா (20). அவரது மனைவி ஜெனி ஆகியோர் மீது நேற்று போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post முதலிரவில் புல்லட் பைக் கேட்டு அடம்பிடித்த மாப்பிள்ளை: 5 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.