இந்நிலையில், அதிருப்தி எம்எல்ஏக்கள் மீண்டும் கட்சிக்கு திரும்புவதாக இமாச்சல முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு கூறியிருந்தார். இது குறித்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களில் ஒருவரான ரஜிந்தர் ரானா அளித்த பேட்டியில், ‘‘முதல்வர் மக்களை தவறாக வழிநடத்துகிறார். நாங்கள் யாரும் திரும்பி வர மாட்டோம். அதோடு இன்னும் 9 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் எங்களுடன் தொடர்பில் இருக்கிறார்கள்’’ என்றார்.
இதற்கிடையே அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த முன்னாள் முதல்வர் வீர்பத்ர சிங்கின் மகன் விக்ரமாதித்யா சிங் தனது பேஸ்புக் சுயவிவரத்தில் இருந்து பொதுப்பணித்துறை அமைச்சர் என்பதையும் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் என்பதையும் நேற்று நீக்கி உள்ளார்.
2 அமைச்சர்கள் பாதியில் வெளியேறினர்
இமாச்சல அமைச்சரவை கூட்டம் நேற்று முதல்வர் சுக்வீந்தர் சிங் சுகு தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் கொள்கை முடிவு எடுப்பதில் மோதல் ஏற்பட்டு கல்வி அமைச்சர் ரோகித் தாக்கூர், வருவாய் அமைச்சர் ஜகத் நெகி ஆகியோர் பாதியில் வெளியேறினார்கள். இதனால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.
The post தகுதி நீக்க எம்எல்ஏ பரபரப்பு; இன்னும் 9 எம்எல்ஏக்கள் தொடர்பில் உள்ளார்கள்: இமாச்சலில் காங்கிரசுக்கு சிக்கல் appeared first on Dinakaran.