சண்முகையா எம்எல்ஏ தலைமையில் புதியம்புத்தூரில் திமுக பூத் நிர்வாகிகள் ஆலோசனை

ஓட்டப்பிடாரம், மார்ச் 3: நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு புதியம்புத்தூர் மேற்கு, ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் பூத் நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் சண்முகையா எம்எல்ஏ தலைமையில் நடந்தது. புதியம்புத்தூரில் நடந்த இக்கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ டேவிட்செல்வின், டாக்டர் சுதானந்தன், யூனியன் சேர்மன்கள் ஓட்டப்பிடாரம் ரமேஷ் கருங்குளம் ராஜேந்திரன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் செந்தூர் மணி, ஓட்டப்பிடாரம் ஒன்றியச் செயலாளர் (வ) இளையராஜா, தொண்டர் அணி மாவட்ட அமைப்பாளர் வீரபாகு, ஆத்தூர் மாறன் பாண்டியன், ஒன்றிய கவுன்சிலர் நவநீதகிருஷ்ணன், வர்த்தகர் அணி முத்துக்குமார், மருத்துவர் அணி தங்கவேல்சாமி, சிறுபான்மை அணி திருஞானத்துரை, மகளிர் அணி அமைப்பாளர் ஜெயா, தொண்டர் அணி கோபால், கிளைச் செயலாளர்கள் சற்குணபாண்டி, பாலகுருசாமி, பூவலிங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள், வாக்குச்சாவடி முகவர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

The post சண்முகையா எம்எல்ஏ தலைமையில் புதியம்புத்தூரில் திமுக பூத் நிர்வாகிகள் ஆலோசனை appeared first on Dinakaran.

Related Stories: