வங்கதேசத்தில் உணவகத்தில் ஏற்பட்ட தீ அடுக்குமாடி குடியிருப்புக்கு பரவியது.. 44 பேர் உடல் கருகி பலி..!!

வங்கதேசத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 44 பேர் உயிரிழந்தனர். தலைநகர் டாக்காவில் உள்ள ஒரு பிரியாணி கடையில் ஏற்பட்ட நெருப்பு அருகில் இருந்த 7 மாடி சொகுசு குடியிருப்புக்கு பரவியது. அடுத்தடுத்த தளங்களுக்கு தீ வேகமாக பரவியதால் பலர் மொட்டை மாடியில் தஞ்சமடைந்தனர். 75 பேரை தீயணைப்பு வீரர்கள் மீட்ட நிலையில், 44 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். சிலர் தண்ணீர் குழாய்களை பிடித்து கீழே இறங்கிவந்தனர். 2 மணி நேர போராட்டத்துக்கு பின் தீ அணைக்கப்பட்டது.

The post வங்கதேசத்தில் உணவகத்தில் ஏற்பட்ட தீ அடுக்குமாடி குடியிருப்புக்கு பரவியது.. 44 பேர் உடல் கருகி பலி..!! appeared first on Dinakaran.

Related Stories: