பெங்களூருவில் பிரபல உணவகத்தில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு தொடர்பாக 4 பேரிடம் காவல்துறை விசாரணை..!!

பெங்களூரு: பெங்களூரு குண்டுவெடிப்பில் சந்தேகத்திற்குரிய நபரை பிடித்து காவல்துறை விசாரித்து வருகிறது. பெங்களூரு “ராமேஸ்வரம் கபே”வில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் தொடர்புடையவரின் சிசிடிவி காட்சி வெளியானது. சிசிடிவி காட்சிகளில் தொப்பி அணிந்தபடி செல்லும் நபரை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை பிடித்தது. சந்தேகத்திற்குரிய நபருடன் மேலும் மூவரை பிடித்து விசாரணை நடத்துவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மங்களூரு குண்டுவெடிப்பில் கைது செய்யப்பட்ட சாரிக் அவரது கூட்டாளியிடமும் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

The post பெங்களூருவில் பிரபல உணவகத்தில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு தொடர்பாக 4 பேரிடம் காவல்துறை விசாரணை..!! appeared first on Dinakaran.

Related Stories: