அப்போது, இவரை நோட்டமிட்டு வந்த 10க்கும் மேற்பட்ட ரவுடி கும்பல் கார் கண்ணாடியின் முன்பக்கத்தில் நாட்டு வெடிகுண்டுகளை சரமாரியாக வீசியது. இதில் கண்ணாடியை துளைத்துக் கொண்டு வெடிகுண்டு காருக்குள் விழுந்து வெடித்தது. அதில், ஆராமுதனின் இடது கை முறிந்து துண்டானது. அதன்பின்னர் அந்த கும்பல் காரை சுற்றிவளைத்தது. காரை திறந்து, காரில் இருந்து வெளியே இழுத்து போட்டு கை, கால், தலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சரமாரியாக வெட்டிவிட்டு பைக் மற்றும் காரில் ஏறி தப்பிச் சென்றது. அப்போது காரில் இருந்த டிரைவர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அலறி அடித்து நாலாபுறமும் சிதறி ஓடினர்.
வண்டலூர் மேம்பாலம் அருகே என்பதால் ஏராளமான வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. பொதுமக்களும் நின்று கொண்டிருந்தனர். அப்போது பஸ் நிறுத்தம் அருகே இந்த சம்பவம் நடந்ததால் அங்கும் நின்று கொண்டிருந்த ஏராளமான பொதுமக்கள் சிதறி ஓடினர். மின்னல் வேகத்தில், ரவுடி கும்பல், வெறித்தனமாக திமுக பிரமுகரை கொலை செய்து விட்டு தப்பிச் சென்றது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஓட்டேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த ஆராமுதனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
The post நாட்டு வெடிகுண்டு வீசி திமுக பிரமுகர் வெட்டி கொலை: வண்டலூரில் பரபரப்பு; ரவுடி கும்பலுக்கு வலை appeared first on Dinakaran.