திருப்பூர்: பல்லடம் அருகே வேலம்பட்டியில் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வேலம்பட்டியில் புதிதாக அமைக்கப்பட்ட சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு பொதுமக்கள், விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். புதிய சுங்கச்சாவடியில் நாளை முதல் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிப்பு வெளியான நிலையில் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.