கோவை: கோவை ஆர்.எஸ்.புரத்தில் செயல்பட்டு வரும் டைல்ஸ் கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கடையில் டைல்ஸ் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் முதல் தளத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். டைல்ஸ் கடையின் 2, 3வது தளத்துக்கு தீ பரவாமல் தடுக்க தீயணைப்பு வீரர்கள் போராடினர்.