இதனால், அமோனியா வாயு கசிவு ஏற்பட்ட தொழிற்சாலையை தற்காலிகமாக மூட, தமிழக அரசு உத்தரவிட்டது. மேலும், எண்ணூர் தனியார் உர தொழிற்சாலையை நிரந்தரமாக மூட வேண்டும் எனக்கோரி, 33 கிராம மக்கள் தொடர்ந்து 62வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறனர்.
இந்நிலையில், தொழிற்சாலை கடந்த 2 மாதங்களாக செயல்படாமல் உள்ளதால், சுமார் 1000க்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் வருமானம் இன்றி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மீட்க, இந்த தொழிற்சாலையை மீண்டும் திறக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி தொழிலாளர்கள், தொழிற்சங்க நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டோர் நேற்று தொழிற்சாலை உள்ளே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
The post உர தொழிற்சாலையை திறக்க கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.