இதனையடுத்து, அச்சிறுப்பாக்கம் அடுத்த அண்ணா நகர் பகுதி தேசிய நெடுஞ்சாலையையொட்டி 1 ஏக்கர் பரப்பளவில் ரெட்டைமலை சீனிவாசன் நினைவு மண்டபம், திருஉருவ சிலை ஆகியவற்றை செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டு இடம் தேர்வு செய்யப்பட்டது. இதனையடுத்து, கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தது. அந்த கட்டுமான பணிகளை விசிக கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், எம்பி ரவிக்குமார், எம்எல்ஏக்கள் பனையூர் பாபு, பாலாஜி ஆகியோர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆய்வு செய்தனர். இதனிடையே, பணி முடிவடைந்த இரட்டைமலை சீனிவாசன் மணி மண்டபத்தை திறக்க வேண்டும் என விசிக கட்சி மாவட்ட செயலாளர் பொன்னிவளவன், மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து மனு அளித்திருந்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு காணொலி காட்சி மூலம் செங்கல்பட்டு மாவட்டம் சார்பில் நன்றி தெரிவித்தார். இதனையடுத்து, மணிமண்டபத்தில் காஞ்சிபுரம் எம்பி செல்வம், செய்யூர் எம்எல்ஏ பனையூர் பாபு, செங்கல்பட்டு கூடுதல் ஆட்சியர் அனாமிகா, ஒன்றிய குழு பெருந்தலைவர் கண்ணன், பேரூராட்சி தலைவர் நந்தினி கரிகாலன், துணை தலைவர் எழிலரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு இரட்டைமலை சீனிவாசன் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில், பேரூராட்சி உதவி இயக்குனர் லதா, பேரூர் செயலாளர்கள் அருள் குமார், ஒன்றிய செயலாளர் தம்பு, மாவட்ட துணை செயலாளர் கோகுலக்கண்ணன், ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் சிவக்குமார், விசிக மாவட்ட செயலாளர்கள் பொன்னிவளவன், தமிழினி, முன்னாள் மாவட்ட செயலாளர் ஆதவன், அரசு அதிகாரிகள் திமுக, விசிக கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
The post அச்சிறுப்பாக்கம் ஒன்றியம் கோழியாளம் கிராமத்தில் ரூ.2.18 கோடியில் இரட்டைமலை சீனிவாசன் மணிமண்டபம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.