சிறப்பு அழைப்பாளர்களாக காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர் எம்எல்ஏ, காஞ்சிபுரம் எம்பி செல்வம், தொகுதி பொறுப்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், தலைமை கழக பேச்சாளர் ரவீந்திரன், நாத்திகம் நாகராஜன் உள்ளிட்ட கலந்து கொண்டு பேசினர். இதனைத்தொடர்ந்து, அச்சிறுப்பாக்கம் ஒன்றியங்களில் உள்ள அரசு பள்ளிகளில் பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவ – மாணவிகளுக்கு ஊக்கத்தொகை, 10 விவசாயிகளுக்கு மருந்து தெளிப்பான் இயந்திரம் மற்றும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட 2 ஆயிரம் மகளிருக்கு புடவைகளை காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட கவுன்சிலர் மாலதி, நிர்வாகிகள் வேதாச்சலம், வேணு, கோபி, சிலம்பரசன், சரத்குமார், இளங்கோ, பத்மா, சசிகுமார், ராம்குமார், உள்ளிட்ட இளைஞர்கள், திமுக முன்னோடிகள் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
The post முதல்வர் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள்: எம்எல்ஏ சுந்தர் வழங்கினார் appeared first on Dinakaran.