திமுக அரசின் சாதனையை விளக்கி பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வினியோகம்

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில் ‘இல்லந்தோறும் ஸ்டாலின் குரல்’ என்ற தலைப்பில் திமுக அரசின் சாதனைகள் விளக்கி, பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வினியோகம் நடந்தது. தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்று இரண்டரை ஆண்டு நிறைவடைந்ததையொட்டி, தமிழகம் முழுவதும் ‘இல்லந்தோறும் ஸ்டாலின் குரல்’ என்ற தலைப்பில் தமிழக அரசின் இரண்டரை ஆண்டு சாதனைகளை பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும் விதமாக துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக, திருக்ழுக்குன்றம் வடக்கு ஒன்றிய திமுக மற்றும் திருக்கழுக்குன்றம் பேரூர் சார்பில், ‘இல்லந்தோறும் ஸ்டாலின் குரல்’ நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு திருக்கழுக்குன்றம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் தமிழ்மணி தலைமை தாங்கினார். பேரூர் செயலாளர் யுவராஜ் முன்னிலை வகித்தார்.

இந்நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்ட தொகுதி பொறுப்பாளர் பரிதி இளம் சுருதி பாக முகவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். அதனைத்தொடர்ந்து, வீடுகள் தோறும் கட்சியினர் சென்று பொதுமக்களிடமும் திராவிட மாடல் அரசின் இரண்டரை ஆண்டு சாதனைகள் மற்றும் செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கி, திட்டங்கள் குறித்து விளக்கினர். இதில், மாவட்ட துணை செயலாளர் விஸ்வநாதன், மாவட்ட கவுன்சிலர் ரமேஷ், ஒன்றிய துணை சேர்மன் பச்சையப்பன் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.

The post திமுக அரசின் சாதனையை விளக்கி பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வினியோகம் appeared first on Dinakaran.

Related Stories: