2026 தேர்தல்: பிரசாந்த் கிஷோரை அணுகும் அதிமுக?

சென்னை: 2026 சட்டமன்ற தேர்தலுக்கான வியூகங்களை வகுக்க தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரை அ.தி.மு.க அணுக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்களவை தேர்தல் தோல்விக்கு பிறகு அதிமுக தலைமை தொடர் ஆலோசனைகளை நடத்தி வருகிறது. தொகுதி வாரியாக எடப்பாடி பழனிசாமி நிர்வாகிகளிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தி தேர்தல் தோல்வி குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார். ஆந்திர சட்டமன்ற தேர்தலில் இமாலய வெற்றி பெற்ற சந்திரபாபு நாயுடுவுக்கு பிரசாந்த் கிஷோர் மறைமுகமாக ஆலோசனைகளை வழங்கி வந்தார். ஆந்திரா ஃபார்முலாவை தமிழகத்தில் பரிசோதிக்க அ.தி.மு.க. முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் வியூக பணிகளிலிருந்து விலகி பீகார் மாநிலத்தில் தீவிர அரசியலில் பிரசாந்த் கிஷோர் ஈடுபட்டு வருகிறார்.

The post 2026 தேர்தல்: பிரசாந்த் கிஷோரை அணுகும் அதிமுக? appeared first on Dinakaran.

Related Stories: