மாஞ்சோலை தொழிலாளர்களுக்கான வாழ்வாதாரம் பாதுகாக்க வேண்டும்: காங்கிரஸ் மனு

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி, எஸ்.டி.பிரிவு தலைவர் எம்.பி.ரஞ்சன்குமார், சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சரின் தனி செயலாளர்-1 முருகானந்தனிடம் நேற்று பல்ேவறு கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றை அளித்தார். அதன் பின்னர் எம்.பி.ரஞ்சன்குமார் அளித்த பேட்டி: பகுஜன் சமாஜ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறோம். மேலும் மாஞ்சோலை தொழிலாளர்களுக்கான வாழ்வாதாரம் பாதுகாக்க வேண்டும். பட்டியலின மக்கள் அரசு பதவில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு தடுக்கப்படுகிறது. இதற்காக நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டியலின மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினோம். முதலமைச்சரின் தனி செயலாளர் எடுத்து வரும் நடவடிக்கை குறித்து அளித்த பதில் திருப்தியாக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

The post மாஞ்சோலை தொழிலாளர்களுக்கான வாழ்வாதாரம் பாதுகாக்க வேண்டும்: காங்கிரஸ் மனு appeared first on Dinakaran.

Related Stories: