ஆனால், யாருக்கு அமைச்சர் பதவியை கொடுப்பது என்பதில் முதல்வருக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று சேலத்தில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டார். பின்னர், சேலம் சூரமங்கலத்தில் உள்ள சற்குரு அப்பா பைத்தியம் சுவாமி கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அப்போது, சுவாமியிடம் அமைச்சர் பதவியை எப்போது நிரப்புவது, யாருக்கு அமைச்சர் பதவி கொடுப்பது என்று உத்தரவு கேட்டார். அதன் பிறகு, அங்கிருந்து நேற்று மாலை புதுச்சேரி வந்தார். இதனை தொடர்ந்து, புதிய அமைச்சரை முதல்வர் ரங்கசாமி விரைவில் நியமிப்பார் என்று என்ஆர் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
The post அமைச்சர் பதவியை யாருக்கு கொடுப்பது? அப்பா பைத்தியம் சுவாமியிடம் உத்தரவு கேட்ட முதல்வர் ரங்கசாமி appeared first on Dinakaran.