இதைத் தொடர்ந்து சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. இதில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆதிகேசவலு, மாவட்ட நீதிபதி பா.உ.செம்மல், அமைச்சர் சேகர்பாபுவின் மனைவி சாந்தி, அறநிலையத்துறை உதவி ஆணையர் லட்சுமிகாந்தன் பாரதி, க.சுந்தர் எம்எல்ஏ, மாவட்ட வருவாய் அலுவலர் செ.வெங்கடேஷ், மண்டல குழு தலைவர் சாந்தி, மாநகர செயலாளர் தமிழ்செல்வன், தலைமை செயற்குழு உறுப்பினர் சீனிவாசன், கச்சபேஸ்வரர் கோயில் திருப்பணி குழு நிர்வாகிகள், ஏகாம்பரநாதர் கோயில் அறங்காவலர் உறுப்பினர் ஜெகநாதன், மாமன்ற உறுப்பினர் கார்த்திக் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இன்று மாலை உற்சவர்களான புஷ்பவல்லி தாயார் சமேத ஆதிகேசவப் பெருமாள் மலர் அலங்காரங்களுடன் வீதியுலாவாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் சந்தோஷ்குமார், மாமன்ற உறுப்பினர் கார்த்திக், கோயில் செயல் அலுவலர் கார்த்திகோயன் ஆகியோர் தலைமையிலான விழாக் குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.
The post காஞ்சி கோயிலில் கும்பாபிஷேக விழா appeared first on Dinakaran.