இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் விஜய்குமார் கங்கபூர்வாலா மற்றும்
இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், அரசின் அரசாணையை மீறி மதுரை மீனாட்சியம்மன் கோயிலை சுற்றி கட்டப்பட்ட விதிமீறல் கட்டிடங்கள் மீது தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என வாதிடப்பட்டது.
இதையடுத்து மதுரை மாநகராட்சி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மதுரை மீனாட்சியம்மன் கோயிலை சுற்றி 1 கிலோ மீட்டர் சுற்றளவில் 9 மீட்டருக்கு மேல் கட்டிடங்கள் கட்டிய உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட உள்ளது. விரிவான விசாரணை நடத்தப்பட உள்ளது. விதிகளை மீறி கட்டிடம் கட்டப்பட்டு இருப்பது உறுதியானால் எவ்வித பாகுபாடும் இல்லாமல் கடும் நடவடிக்கை எடுப்போம் என கூறினார்.
இதனை பதிவு செய்த நீதிபதிகள், விதிமீறல் கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் 10 ஆண்டுகளாக மாநகராட்சி அதிகாரிகள் என்ன செய்தார்கள்? மீனாட்சியம்மன் கோவிலை சுற்றி கட்டடங்கள் கட்ட மாநகராட்சி நிர்வாகம், உள்ளூர் திட்டக்குழுமம் கொடுத்த அனுமதி எத்தனை? என நீதிபதிகள் கேள்வி எழுப்பியதோடு, மேலும் விரிவான அறிக்கையை ஏப்ரல் 4க்குள் சமர்ப்பிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
The post அதிகாரிகள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தனரா?: மதுரை கோயிலை சுற்றி விதிமீறல் கட்டிடங்கள் மீது நடவடிக்கை கோரிய வழக்கில் ஐகோர்ட் கிளை கேள்வி!! appeared first on Dinakaran.