இன்னும் 3 நாட்களில் தங்கவேல் பணியில் இருந்து ஓய்வுபெறவுள்ளதால் இந்த விவகாரத்தில் சிறப்பு ஆணை வெளியிடவேண்டும் என்று அரசுக்கு ஆசிரியர் மற்றும் பணியாளர் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. இதனிடையே மருத்துவ விடுப்பு முடிந்து இன்று பணிக்கு திரும்பிய தங்கவேல் கணினி அறிவியல் துறை தலைவராக பதவியேற்று கொண்டார். இந்நிலையில் அரசின் உத்தரவுப்படி தங்கவேல் மீது துணைவேந்தர் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து தொடர் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் இன்று மாலை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்.
The post சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர் விவகாரம்: தொடர் போராட்டத்தில் ஈடுபடுவது குறித்து இன்று மாலை முடிவு.. ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை!! appeared first on Dinakaran.