நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்தவர் சாவு

திருவில்லிபுத்தூர்: தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மந்திதோப்பு எம்கேடி.நகரை சேர்ந்தவர் சந்திரசேகர் (30). இவர் நேற்று முன்தினம் விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்திற்கு வந்தார். நீதிமன்ற வளாகத்தில் திடீரென உடலில் பெட்ரோலை ஊற்றிக்கொண்டு தீக்குளித்தார். அருகில் இருந்தவர்கள் அவரை காப்பாற்றி திருவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக திருவில்லிபுத்தூர் நகர் போலீசார் விசாரித்ததில், தீக்குளிக்க முயன்றவர் மீது மூன்று வழக்குகள் உள்ளது தெரியவந்தது. முதலுதவி சிகிச்சைக்குப் பின், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு சந்திரசேகர் அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார்.

The post நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்தவர் சாவு appeared first on Dinakaran.

Related Stories: