சென்னை: சென்னை பள்ளிக்கரணையில் ஷர்மி என்ற பெண்னை சாதி மறுப்பு திருமணம் செய்த பிரவீன் என்ற இளைஞர் ஆணவப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். ஷர்மியின் அண்ணன் தினேஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் 3 பேர் இணைந்து பிரவீனை சரமாரியாக வெட்டிக் கொன்று விட்டு தலைமறைவாகினர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.