குடிநீர் திட்ட பணியாளர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் விடுப்பு அளிக்க வேண்டும்

ஜெயங்கொண்டம்: குடிநீர் திட்ட பணியாளர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் விடுப்பு அளிக்க வேண்டும் என்று நகராட்சிகள் அனைத்து பணியாளர்கள் முன்னேற்ற சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஜெயங்கொண்டம் நகராட்சி கிளை சங்கத்தின் சார்பில் தமிழ்நாடு நகராட்சிகள் அனைத்து பணியாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் ஜெயங்கொண்டம் கிளை நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் பாண்டியன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் தம்பி சிவம் முன்னிலை வகித்தார். மாநில பொருளாளர் விஜயகுமார், மாநில துணை பொதுச்செயலாளர் விஜயராகவன், மாநில மகளிர் அணி தலைவி தங்க சரஸ்வதி, மாவட்ட துணைத் தலைவர் செழியன், மாவட்ட அமைப்புச் செயலாளர் கோதண்டராமன் மற்றும் நகராட்சி மேலாளர் அன்புச்செல்வி, வருவாய் ஆய்வாளர் ஜெயங்கொண்டம் நகர கிளை சங்க பொறுப்பாளர் காளிமுத்து, ஒப்பந்த பணியாளர் சங்க பொறுப்பாளர் சசிகுமார் மற்றும் குடிநீர் திட்ட பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள்,

The post குடிநீர் திட்ட பணியாளர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் விடுப்பு அளிக்க வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: